Thangam Thenarasu
@TThenarasu
Minister for Finance and Environment & Climate Change, Government of Tamil Nadu
2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக, கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். @mkstalin #TNBudget2025 #TamilnaduLeads


கல்வி, விவசாயம், தொழில் நுட்பம், உள்கட்டமைப்பு மேம்பாடு என அனைத்திலும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றிடும் பெரும் கனவைக் கொண்டு வழிநடத்திய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவுநாள் இன்று. இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக, எளிமையின்…

மேம்படுத்தப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக, நேற்று தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த மாண்புமிகு பிரதமர் அவர்களை, மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி வரவேற்றோம். @PMOIndia @mkstalin




விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியில், புலிக்குறிச்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.29.60 லட்சத்தில் நவீன வசதிகளுடன் இரண்டு வகுப்பறைகளையும், எர்ரம்பட்டியில் ரூ.6.50 லட்சத்தில் பயணியர் நிழற்குடையையும், நந்திகுண்டு கிராமத்தில் ரூ.9.96 லட்சத்தில் நியாய விலைக் கடையையும் திறந்து…
மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் நிலையிலும், மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் எப்போதும் உழைத்துக்கொண்டுள்ளார். அவரது சிந்தனை இந்த நாட்டு மக்களுக்கானதாகவே இருக்கிறது. @mkstalin
மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். மாண்புமிகு @TThenarasu அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்குவார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியிலுள்ள புலிக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.29.60 லட்சம் மதிப்பீட்டில், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், வசதியானக் கற்றல் சூழலை உருவாக்கவும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு புதிய வகுப்பறைக்…




விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதிக்குட்பட்ட காரியாபட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த நந்திக்குண்டு கிராமத்தில் ரூ.9.96 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை, இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, மக்களுக்கு குடிமைப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தேன்.




இன்று சென்னை - அடையாறு முகத்துவாரத்தில், 2025 ஆம் ஆண்டு சர்வதேச சதுப்புநில சூழல் அமைப்பு பாதுகாப்பு தின விழாவானது, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சிறப்பாக நடைபெற்றது. சதுப்புநிலங்கள் மற்றும் பசுமையான இயற்கை வளங்களைப் பாதுகாப்பதை மையமாகக் கொண்டு நடைபெற்ற…
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், இன்று சென்னை - அடையாறு முகத்துவாரத்தில் 2025ஆம் ஆண்டு சர்வதேச சதுப்பு நில சூழல் அமைப்பு பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நம் போராட்டத்தில் சதுப்பு நிலங்களின்…




மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக் குழுமத்தின் மதிப்புறு தலைவரும், புகழ்பெற்ற மருத்துவருமான 'பத்மஸ்ரீ' திரு. நம்பெருமாள்சாமி அவர்களின் மறைவு மருத்துவத் துறைக்கும், சமூகத்திற்கும் பேரிழப்பாகும். தென் தமிழ்நாட்டின் எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து, மதுரை மருத்துவக் கல்லூரியில்…

தமிழ்நாடு சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட, மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்தநாள் - ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொண்டு, கடல் கடந்து உலக நாடுகளின் மேல் படையெடுத்து வெற்றி கண்ட, இந்தியத் துணைக் கண்டத்தின்…
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தமிழ் நிலத்தின் வரைபடத்தையே மாற்றி அமைத்த மாமன்னன் இராஜேந்திர சோழன், தனது தந்தையான புகழ்பெற்ற இராஜராஜ சோழனை விஞ்சிய வீரத் தனயன். போர்க்களத்திலேயே தனது ஆட்சிக் காலத்தின் பெரும்பகுதியைக் கழித்து, வெறும் நம் எல்லையோடு நின்றவர் அல்ல; கடல் கடந்து தனது…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 2021-ஆம் ஆண்டு அறிவித்தபடி, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட, மாமன்னன் இராஜேந்திர சோழன்…




'வடவேங்கடம் முதல் தென்குமரி வரை' எனவிருந்த தமிழர் எல்லையை, கங்கையும் கடாரமும் கொண்டு விரித்திட்ட செயங்கொண்டானை தலைவணங்கிடும் நன்னாள் இது. “நித்தில நெடுங்கடல், உத்திரலாடமும், வெறிமலர் தீர்த்தத்து, எறிபுனல் கங்கையும், அலைகடல் நடுவில், கலம்பலச் செலுத்தி கங்கையும் கடாரமும் கொண்டு"…
மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தொழில்துறை, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சமூக நலனில் மாபெரும் சாதனைகளைப் படைத்து நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது, தமிழ்நாடு. அந்தச் சாதனை பட்டியலில் மற்றுமொன்றாக, தமிழ்நாடு ரூ.1,96,309 என்ற தனிநபர் வருமான…


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு @mkstalin அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சார்பில், பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் பெற்றோரை இழந்த…




கேரளா மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொலிட் பீரோ உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு. வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பொதுவுடைமை அரசியல் இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவராக, கேரள…

மண் - மொழி - மானம் காக்கவும் தமிழ்நாட்டின் மாநில உரிமைகளையும் ஜனநாயக விழுமியங்களையும் பேணிக் காக்கவும், தமிழ்நாட்டு மக்களை ஒரு குடையினுள் அணிதிரட்டும் விதமாக "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை மற்றும் பரப்புரை திட்டமானது மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின்…




மதுரையில் இன்று நடைபெற்ற தொல்லியல் கழகத்தின் 33 ஆம் ஆண்டு கருத்தரங்கத்தில் பங்கேற்றேன். இந்நிகழ்வில், கல்வெட்டு அறிஞர் முனைவர் திரு சு. இராசகோபால் அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" நூலினை மகிழ்ச்சியோடு வெளியிட்டேன். அன்றில் சித்திரக்கூடம் அமைத்திருந்த அருமையான…




விருதுநகர் தெற்கு - வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் சார்பில் நேற்று நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுடன் கலந்துகொண்டேன். எதிர்வரும் 2026…




முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், கழகத் தலைவர் தளபதி அவர்களின் சகோதரருமான அண்ணன் திரு. மு.க.முத்து அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். துயர் நிறைந்த இவ்வேளையில், அண்ணனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்…
